நோக்கம்
அறிவுலகின் ஆசானாய் தமிழர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தத்துவ மேதை பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் பற்றி இதோ எமது படைப்புக்களை இங்கே பதிவு செய்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை இங்கே எமது பார்வைக்கு வைக்க உம்மை அழைக்கிறோம்

தமிழனின் முகவரி
மானுட தந்தை பெரியார்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்

Sunday, September 20, 2009

நாம் தமிழர்

வணக்கம் தோழர்களே
அண்ணன் சீமான் அவர்கள் இயக்கம் தொடங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அது என்னுடைய நீண்ட நாள் கனவும் கூட.
அண்ணனின் தலைமயில் இளைஞர்களை ஒன்றுகூட்ட வேண்டும் என்று.
அதை அவர் பெரியார் வழியில் கொண்டு செல்வார் என நினைத்தோம்.ஆனால் அது
அரசியல் இயக்கம் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி.
எந்த அரசியல் வாதியையும் மேடைகளில் ஏற்ற மாட்டோம் என்கிறீர்கள்..?
அந்த வரிசையில் நீங்களும் அரசியல்வாதி தானே..
அப்படி ஏற்றமாட்டீர்கள் என்றால் சினிமாக்காரர்களை மட்டும் தான் ஏற்றுவீர்களா?
கட்சி அரசியலில் ஈடுபட்டு பதவிக்கு வந்தீர்கள் என்றால் நம்மால் என்ன சாதிக்க முடியும்?
வழக்கம்போல் இந்திய அடிமையாக இருப்பது என முடிவெடுத்துவிட்டீர்களா
அண்ணன் சீமான் அவர்களே.
நீங்கள் கூறும் ஈழ விடுதலை இந்திய தமிழ் அடிமைகளுக்கும் தானே ?
இந்தியாவில் அடைபட்டு கிடக்கும் தமிழ் நாட்டு விடுதலைக்கும் போராடுவீர்கள் தானே?
ஏனெனில் நாமே இன்னும் அடிமைகள் )
எனக்கு விளக்கம் தேவை;

Friday, September 4, 2009

ரெட்டி யின் சாவும் தமிழர்களின் மானமும்

என்னடா நடக்குது நாட்டுல

எவ்ளோ தெனாவெட்டு இருந்தா ராஜசேகர ரெட்டி செத்ததுக்கு இங்கன போஸ்டரு ஒட்டுவனுங்க இந்த காங்கிரசு கார கம்முனாட்டிங்க; கழிசடைங்க

தமிழனுக்கு கொஞ்சங் கூட தொடர்பே இல்லாத அனாதையா செத்து போன நாதாரிகளுக்கு இங்க விடுமுறை வேற.. வெக்க கேடு.

லட்சக்கணக்கில இறந்து போன நம் தமிழ் உறவுகளுக்காக ஒரு அறிக்கை கூட விட மனசு இல்லாத கபோதிகளுக்கு விடுமுறை ஒரு கேடா?
கேளுங்கள் தமிழர்களே நீங்கள் என்ன இளிச்ச வாயர்களா?

தமிழா? உனக்கு என்ன ஆனது ஏன் மவுனமாகி போனாய்?
உன் வேகம் என்ன ஆனது ?
உணர்ச்சிகளுக்கு விடுப்பு விட்டு விட்டாயா?
மானத்தை அடகு கொடுத்து விட்டாயா ?

Saturday, June 20, 2009

பெரியாரைப் பிழையாமை

பெரியாரு சாமி இல்லன்னு சொல்லல.ஜாதி சண்டை , மத சண்டை கோபத்துல அப்பிடி சொல்லிட்டாருங்க.மத்தபடி சாமிய தப்பா சொல்லல.

பெரியார் வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம சாமி கும்புட்டாராம் பெரியார்

தலித்துகளுக்கு ஒண்ணுமே செய்யல.

சாமி கும்புடாத பெரியாருக்கு குன்றக்குடி அடிகளாரோட என்னய்யா ப்ரெண்ட்சிப்பு

பெரியாரே விபூதி குங்குமம் பொட்டு எல்லாமே ஏன் வச்சாரு.?
ஜாதி இல்ல இல்லன்னு சொல்லிட்டு ஏன் ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு கேட்டாரு ? இவரு தான ஜாதி எதிர்ப்பாளரா?

அவரு ஒரு வறட்டு நாத்திகவாதி; நாத்திகம் எல்லாம் இப்போதைக்கு நாட்டுக்கு உதவாது.

இதெல்லாம் நம்ம நன்றியுள்ள் சனங்க அய்யா மேல வழக்கமா சொல்றது தான் ஆனாலும் இப்பிடியே விட முடியாது ;
பெரியாரு சாமி இல்லன்னு சொல்லல.ஜாதி சண்டை , மத சண்டை கோபத்துல அப்பிடி சொல்லிட்டாருங்க.மத்தபடி சாமிய தப்பா சொல்லல
மொதல்ல சாமி இருந்தாதானெ கோபிக்கறத்துக்கு.சில மூளை இல்லாத முண்டங்கள் தான் அப்பிடி சொல்லிகிட்டு திரியுதுங்க கடவுள் இல்லை; கடவுள் இல்லை;கடவுள் இல்லவே இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்;வனங்குகிறவன் காட்டுமிராண்டி; நல்லா தெளிவா அழகா பொட்டுல அடிச்சமாறி பெரியாரு அய்யா சொல்லி இருக்காருங்களே. எல்லத்த விட ஏன் கடவுள் இல்லன்னு சொல்றேன்னா. கடவுள் நம்பிக்கை ஒழிஞ்சால் எல்லா ஜாதி மதமும் ஒழிஞ்சி போய்டும் என்றும் சொல்லி இருக்காரு. இதுக்கு மேல இத பத்தி ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்லங்க.


பெரியார் வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம சாமி கும்புட்டாராம்
இத எவன் பாத்தான்னு தான் தெரியல. ஒருத்தனும் இன்னும் நிரூபிக்கல ; இந்த பாப்பார பசங்க தான் மூலைக்கு மூலை இத சொல்லிகிட்டு அலையுறானுவ. அவரோட அப்பா வெங்கட சாமி வீட்டுல கடைசி வரை சாமி கும்புட்டுகிட்டு தான் இருந்தாரு; யாரும் மறுக்கல அது அவங்களோட விருப்பம்.. அவரு பொது வாழ்க்கைக்கு வந்தப்புறம் இயக்கத்தை அமைத்ததற்கப்புறமா ஊட்டுக்குள்ளாற சாமி கும்புட்டாரா? இதுக்கு யாராவது சவால் விட தயாரா?

பெரியார் தலித்துகளுக்கு ஒண்ணுமே செய்யல
ஆதி திராவிடர்கள் தான் (அதாவது கருப்பா இருக்கறவங்க தான்) இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்று முதலில் அறிவித்தவர்தான் பெரியார். கொஞ்சம் சிவப்பாகவோ மா நிறம் கொண்டவர்கள் கூட பிற்காலத்துல பாப்பான் கூட கலப்பு வந்ததற்கு பிறகு தான் நிறம் மாறியது என்றார். நெற்றியிலும் ,சத்திரியன் வைசியன் சூத்திரன் அங்கங்க பொறந்தாங்க ந்னு சொன்னப்ப இதுல எதுல்யும் பொறக்காம , பொறக்கவேண்டிய இடத்துல பொறந்தவன் பஞ்சமன் தானு அய்யா கொடுத்த விளக்கம் யாராலும் மறக்க முடியாது அம்பேத்கரை பெருமைபடுத்தி மகிழ்ந்தவர்களில் பெரியாரை போல் யார்? இட ஒதுக்கீட்டில் நன்றாக சுகம் அனுபவித்துவிட்டு கொழுத்து திரியும் பார்ப்பன அடிவருடிகள் தான் இப்படி பேசமுடியும். நம்மை போன்ற நன்றியுள்ள நாய்களால் பேசமுடியாது.

சாமி கும்புடாத பெரியாருக்கு குன்றக்குடி அடிகளாரோட என்னய்யா ப்ரெண்ட்சிப்பு?

பெரியாரே விபூதி குங்குமம் பொட்டு எல்லாமே ஏன் வச்சாரு.?
சகிப்பு தன்மைக்கு இதைவிட எடுத்துக்காட்டு வேற எதையும் சொல்லமுடியாது< அடுத்தவங்க உணர்வை மதிப்பவர் பெரியார் என்பதை இதிலிருந்தே அறியலாம்.ஆன்மீக வாதியாக இருப்பினும் அவருடைய தமிழ் பற்றும் தொண்டும் யாராலும் மதிக்கப்படவேண்டியவை. அவர் ஒரு ஆன்மீக பகுத்தறிவுவாதி அதை உணர்ந்தவர் பெரியார். ராஜாஜி ஒரு தடவை பெரியாரை சந்தித்த போது பெரியார் அவர்களை வாழ்த்தி விபூதி பூசுனதா சொல்லுறங்க; ஒரு மரியாதைக்காக ஏற்றிருக்கலாம்.

ஜாதி இல்ல இல்லன்னு சொல்லிட்டு ஏன் ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு கேட்டாரு ? இவரு தான ஜாதி எதிர்ப்பாளரா?
எந்த உழைக்கும் மக்கள் எதன் அடிப்படையில் சுரண்டப்படுகிறார்களோ, எதன் அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் அதன் தீவிரத்திலேயே அதை மீட்டெடுப்பதே நூறு விழுக்காடு வெற்றியை தரும் என்று சொல்லி அதை செய்து காட்டியவர் பெரியாரே ஆவார். என்றைக்கு வருணாசிரம தர்மம் ஒழிந்து சமதர்மம் உருவாகுமோ அன்றைக்கு தானாகவே இடஒதுக்கீடு கொள்கை தேவை அற்றதாகிவிடும் என்பது என் கருத்து.

அவரு ஒரு வறட்டு நாத்திகவாதி; நாத்திகம் எல்லாம் இப்போதைக்கு நாட்டுக்கு உதவாது
எந்த இடத்தில் நாத்திகம் பரவுகிறதோ அங்க மக்கள் புரட்சி வெடிக்கும். சம தர்ம சமுதாயம் நிலவும். உலகில் பல்வேறு புரட்சி இயக்கங்கள் தோல்வி யுற்றதற்கு அடிப்படை காரணம் அங்கே நாத்திக சிந்தனை இல்லாதது தான். இப்போதைக்கு உலகத்திற்கு தேவை நாத்திகம் மாத்திரமே; நாத்திகம் வளர்ந்தால் நல்ல சிந்தனை பெருகும்;சாதிமத மோதல்கள் ஒழியும்

பெரியாரை மறுவாசிப்பு செய்ய எண்ணும் தோழர்களுக்கு:
இது தன்னை ப்ப்ற்றி அவரே சொன்னது தான். ஆனாலும் இன்னும் அந்த அளவுக்கு சிந்திக்க யாரும் தகுதி அடைய வில்லை . அதனால் அந்த் எண்ணத்தை இப்போதைக்கு குழி தோண்டி பொதச்சிடுங்க.

படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க
எதாச்சும் தவறான தகவல் இருந்தாலும்
அதிகப்பிரசங்கியாக இருந்தாலும் பொறுத்துகுங்க .

Friday, June 5, 2009

மக்களை அழிக்கும் கிருமிகள்

அல்லோ அலோ யார் பேசுறிங்க?
சன் டி வி லருந்து வர்ஷினி பேசுறன்
ரமேஷா? ஓ கே ரமேஷ் எங்கருந்து பேசுறிங்க ரமேஷ்
என்ன பண்ணிட்ட்ருக்கிங்க ரமேஷ் ஓ
ஆர் யு ஸ்டடியிங்? ஒஒ ஓகே ரமேஷ்
ஒரு கடி ஜோக் சொல்லுங்க ரமேஷ்..

அய்யோ மேடம் எனக்கு ஒண்ணுமே பேச முடில மேடம்
நரிய டயம் ட்ரை பண்ணேன் மேடம்
லைனே கெடக்கலே..
அய்யோ நீங்களே கூப்டு இருக்கிங்க எனக்கு
ஒண்ணுமே பேச வரல மேடம்


ஹாய் வியூவர்ஸ்

அக்சுவல்லி நான் என்ன சொல்ல ட்ரை பன்றேன் நா

உங்க பர்ஃபாமன்ஸ் சூப்பர்ப்;இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணலாமே
இட்ஸ் வெரி எஞ்சாய் ஃபுல்

உங்க பாடி லங்குவேஜ் நல்லாவே இருக்கு இட்ஸ் ரியல்லி சூபெர்ப்
ஓ கே உங்களுக்கும் திவ்யா வுக்கும் கெமிச்ட்ரி ரொம்ப நல்லா ஒர்க் அவுட் ஆகுது
அப்பிடியே கண்டினியூ பண்ணுங்க


டேய் உங்களை என்னடா பண்ணூரது
என்னங்கடா தமிழ் இது;
ஏண்டா இப்பிடி ஆயிட்டிங்க நீங்க?

இந்த அரை வேக்காடுகளுக்கு இந்த ஊடகங்களில் வேலை கொடுத்து விட்டு
நம்ம பண்பாட்டை கெடுக்கிற தொல்லை காட்சி அலைவரிசைகளை புறக்கணிப்போம்

பண்பலை யில் சொல்லவே வேண்டாம்; அளவுக்கு மீறி தமிழ் கொலை
தமிழை அழிக்க ஒரு போட்டியே நடக்கிறது;

தமிழர்களே நமக்கென்று ஒரு தனி அடையாளம் உள்ளது
அதை இழக்காதீர்கள்

தமிழர் களை காட்டி கொடுக்கும் கூட்டி கொடுக்கும் சன், விஜய் தொலை காட்சி களை விரட்டுவோம்.

மக்கள் தொலைக்காட்சியை பரப்புவோம்

Friday, May 29, 2009

ஏமளித்தமிழர்களும் ஐ நா சபையும்

அன்புடையீர் வணக்கம் .

ஐ நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறி
ஈழ தமிழர் களுக்கு வெற்றி கிடைக்கும் என
நீங்கள் நினைத்திருந்தால் நீங்களே ஏமாளி

அப்படியே தீர்மானம் வெற்றி பெற்றிருந்தாலும் பலன் ஒன்றுமில்லை
அவனை ஒன்றுமே செய்ய இயலாது யாராலும்.

உலக நாடுகள் யாருக்குமே ஈழத்தைப்பற்றி கவலை இல்லை
ஏனெனில் ஈழத்திலே மனிதர்கள் கொத்து கொத்தாக செத்துக்கொண்டிருந்த
செய்தி இன்றைக்கு தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கோ தெரியாதா என்ன?
சாகிறபோது காப்பாற்றாமல் எல்லாரும் செத்து ஒழிந்த பிறகு அவன் மேல் போர் குற்றம் சுமத்தி என்ன பயன் ?
மாண்டவர் மீண்டு வருவாரோ?

போர் குற்றம் இந்தியாமீதுதான் சுமத்தப்படவேண்டும் ..இலங்கையையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் அவ்வளவுதான்.. ஏனெனில் போரை நடத்தி தமிழர்களை கொன்றது இந்தியா தான்.

குற்றபட்டியலில் சீனா,பாகிச்தான் ஆகிய நாடுகளையும் சேர்த்திருந்தால்
நாம் வென்றிருக்கலாம்..

இவ்வளவு மனிதப்படுகொலை நடந்த பிறகு நேரில் சென்று பார்வை இட்டு நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு வாகெடுப்பு நடத்துவது மாபெரும் முட்டாள் தனம் இல்லையா தோழர்களே?

தயவு செய்து எண்ணி ப்பாருங்கள் இது யாருடைய சதி வேலை ?
இந்தியா பெரிய அண்ணனா? அமெரிக்கா பெரிய அண்ணனா?

தோழமையுடன்

இராவணன்

ஐ நா வும் இந்தியாவும்

அன்புடையீர் வணக்கம் .

ஐ நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறி
ஈழ தமிழர் களுக்கு வெற்றி கிடைக்கும் என
நீங்கள் நினைத்திருந்தால் நீங்களே ஏமாளி

அப்படியே தீர்மானம் வெற்றி பெற்றிருந்தாலும் பலன் ஒன்றுமில்லை
அவனை ஒன்றுமே செய்ய இயலாது யாராலும்.

உலக நாடுகள் யாருக்குமே ஈழத்தைப்பற்றி கவலை இல்லை
ஏனெனில் ஈழத்திலே மனிதர்கள் கொத்து கொத்தாக செத்துக்கொண்டிருந்த
செய்தி இன்றைக்கு தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கோ தெரியாதா என்ன?
சாகிறபோது காப்பாற்றாமல் எல்லாரும் செத்து ஒழிந்த பிறகு அவன் மேல் போர் குற்றம் சுமத்தி என்ன பயன் ?
மாண்டவர் மீண்டு வருவாரோ?

போர் குற்றம் இந்தியாமீதுதான் சுமத்தப்படவேண்டும் ..இலஙையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் அவ்வளவுதான்.. ஏனெனில் போரை நடத்தி தமிழர்களை கொன்றது இந்தியா தான்.

குற்றபட்டியலில் சீனா,பாகிச்தான் ஆகிய நாடுகளையும் சேர்த்திருந்தால்
நாம் வென்றிருக்கலாம்..

இவ்வளவு மனிதப்படுகொலை நடந்த பிறகு நேரில் சென்று பார்வை இட்டு நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு வாகெடுப்பு நடத்துவது மாபெரும் முட்டாள் தனம் இல்லையா தோழர்களே?

தயவு செய்து இது யாருடைய சதி வேலை ?
இந்தியா பெரிய அண்ணனா? அமெரிக்கா பெரிய அண்ணனா?

தோழமையுடன்

இராவணன்

கலைப் போராளி சீமான்

கலைப் போராளி சீமான் அவர்களே,
வணக்கம்அண்ணா எல்லா இளைஞர்களைப்
போலவும் நானும் உங்கள் பொறி பறக்கும் பேச்சை க்கேட்டு ஆவேசம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்,அடிக்கடி உங்களை ஒரு தனியார் தொலைக்காட்சி களில் பார்த்து
பேச்சை கேட்டு உங்கள் மீது பைத்தியம் ஆகிப்போனேன்.தமிழ் இளைஞர்களை
பெரியார் வழியில் இட்டு செல்ல ஒரு நல்ல வழிகாட்டியாய் இருப்பீர்கள் என நம்புகிறேன். இப்போதும்..நீங்கள் உங்கள் தொழில் தொடர்பாக எமது சிற்றூரில் வந்து தங்கிய போது உம்மை அழைத்து சிறப்பு கூட்டம் நடத்தினோம்.மிக மிக மகிழ்ச்சி அடைந்து பூரித்து போனேன்.இந்த முறை தாங்கள் கேட்டுகொண்ட படி அ இ அ தி மு க அணிக்கே வாக்களித்தேன்( என் வீட்டில் எதிர்ப்பை மீறி ஏனெனில் எமக்கு உதய சூரியன் தவிர வேறெதுவும் தெரியாது உங்களை போலவே நானும் எம் ஜி ஆர் படம் பார்த்தாலே
குற்றமென உணர்ந்து வளர்ந்தவன்)
அண்ணா அது என்ன காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என ஒரு புது முழக்கம்?
தி மு க என்ன செய்தது ?
அதன் தலைவர்கள் என்ன செய்தார்கள் என் உறவுகள் செத்தொழிந்த போது?
போராட வேண்டாம் ஒரு ஈன கூக்குரல் கூட கேட்க வில்லையேநீங்கள் திருச்சி கூட்டத்திற்கு வருகை தந்தீர்கள், எதிர் பார்த்ததை விட அதிக உணர்வோடு பேசினீர்கள்..என்னால் எச்சில் கூட விழுங்கமுடியாமல் உங்களை உற்று கவனித்தேன்.காங்கிரசை கழட்டு கழட்டு என கழட்டினீர்கள், மானங்கெட்ட காங்கிரசு க்காரனுக்கு உறைக்காது . விட்டு விடுவோம்..
நம்ம செய்திக்கு வருவோம்?
திருச்சி உரையில் ஒன்று குறிப்பிட்டீர்கள்..கலைஞரை சாடமாட்டேன் என்று.
அவருடைய தமிழ் எனக்கு வாழ்வளித்தது.உண்மை தான் அண்ணா. அன்றும் இன்றும் நம்பினோம்.கலைஞரின் கரங்கள் எப்போதும் காங்கிரசை பற்றிக்கொண்டிருக்காது .அது ஒரு நாள் காங்கிரசை விட்டு விலகும். அப்போது உங்களோடு முதலில் கரம் கோர்ப்பவன் நான்தான் என்று.ஈழ ப்படுகொலையில் அவர் இன்றைய நிலை என்ன? உமக்கு தெரியாதா?ஒரு வேளை தெரியாமல் செய்துவிட்டார் என நம்புகிறீர்களா?ஏன் அவ்வளவு பாசமா கலைஞர் மீது அண்ணா?உமது கலைக்குழுவில் யாருமே சாடவில்லையே? கலைஞரை யாருமே கண்டிக்கவில்லையேகலை உலக பாசமா?

ஈழ ப்படுகொலை யில் துரோகம் செய்தது திமுக இல்லையா?இல்லையெனில் காங்கிரசின் துரோகத்துக்கு துணை போக வில்லையா?துரோகத்தை விட அதற்கு துணை போவது மாபெரும் குற்றம் இல்லையா?வரலாறு மன்னிக்குமா? கலைஞரை?

குறிப்பு: இந்த இடுகை தேர்தலுக்கு முன்னர் எழுதி இப்போது மீண்டும் வெளியிடப்படுகிறது.

தேர்தல் வெற்றி பெற்ற பணத்திற்கு எனது வாழ்த்துகள்

காங்கிரசின் வெற்றிக்கு ஒருவேளை உமது பாரபட்சமான தேர்தல்பரப்புரை தான் காரணமாக இருக்குமோ?